Thursday, May 12, 2022

🌹புதிய காதல் கவிதைகள் :: Tamil kadhal Kavithai and Love Quotes in Tamil

புதிய காதல் கவிதைகள் 2022 - Tamil kadhal Kavithai and Love Quotes in Tamil for Social Status, Stories, and Podcast.

Kaadhal Kavithai (காதல் கவிதை) 2022

 Kaadhal kavithaigal

👇👇👇👇👇👇👇


யார் வலிகள்

தந்தாலும்

அனைத்துக்குமான

மருந்து

நீ மட்டுமே

எனக்கு ..

நீ வா(சுவா)சிக்க

மட்டுமே

மலர்ந்தது இந்த

சிவப்பு ரோஜா ☘️❣️🎉


கொஞ்சம் வெளிச்சம்

கொஞ்சம் இரவு

கொஞ்சம் காற்று

கொஞ்சம் மழை

கொஞ்சம் பயணம்

கொஞ்சும் விரல்களில்

நிறைய காதல்☘️❣️🎉


நிர்மலமான

இந்த உலகில்

நிறைந்தேயிருப்போம் வா

நீயும் நானுமாய் ☘️❣️🎉


தேடலில் தொலைவதும்

ஒருவித சுகம்தான்

நீயும் உணர்ந்திருப்பாய்தானே

அலையே


கனவின் மிச்சத்தை

உயிர்ப்பிக்காமல்

உணர்விண்றியே

உதயமாகிக் கொண்டுதானிருக்கிறது

ஒவ்வொரு விடியலும் ☘️❣️🎉


தொடர்வண்டி என்னதான்

வேகமாகச் சென்றாலும்

அதைவிட வேகமாக

பின்நோக்கியே செல்கிறது

மனது ☘️❣️🎉


உன் விரல்கள்

தீண்டவே

அடிக்கடி வியர்க்கிறது

என் விழிகள் ☘️❣️🎉

இதையும் படிங்க:🌺💚👇

என் நிழலை

தோற்கடிக்கும்

இருளாயல்ல

அந்த நிழலுக்கு

உயிர்கொடுக்கும்

ஒளியாய் நீயே ☘️❣️🎉


உணர்ந்த தனிமை

உணராத வெறுமை

நடுவே சிக்கித் தவிக்குது

உன் நினைவெனும் அருமை


நீ

எத் தொலைவுக்கு

சென்றாலும்

என் நினைவின்றி

நீயில்லை

என்பதே

நம் காதலின்

வெற்றிதான்


என் கண்களின்

ஜீவன் உன்னில்


நீ தெளிவாகத்

தான் உரையாடி

கொண்டிருக்கிறாய்

நான் தான்

உளறிக் கொண்டிருக்கிறேன்

மனதுக்குள் உன்னோடு

காதலில்



இருளுக்குள் அடைக்கலம்

கொண்ட ஒளியாய்

தேடுகிறேன்

நானும் உன்னில்

அடைகலம்

இதையும் படிங்க:🌺💚👇

ஆனந்தமோ ஆதங்கமோ

என் கண்ணீரும்

உனக்காக மட்டுமே

எப்போதுமே..


நீ முறைத்தாலும்

காதல் தான்

என்று எனை

வார்த்தையிலும்

கவிழ்த்திடும்

கள்வன் நீ


கண்ணாடிக் குவளையாய்

பாதுகாக்குறேன்

நம் காதலை

உடைந்தால்

இருவருக்குமே ரணம்

உடைத்து விடாதே


ஒரு மரத்தில்

பல இலை

கிளைகளாய்

நீ என்பதில்

எத்தனை எத்தனை

நினைவு

அழகாய் மனதில்


வாசிப்பது நீயென்றால்

யோசிக்காமல் எழுதுவேன்

கண்களிலும்

மை கொண்டு

பல கவிதைகள்


உன் அழுத்தமான

முத்தம்

நீ எனக்கே

எனக்கென்று சொல்லாமல்

சொல்கிறது அன்பே


ஆள்தல் நீயென்றால்

வாழ்தலும் வரமே

காதல் ராஜ்ஜியத்தில்


நினைவோ நிஜமோ

உன்னுடனேயே தான்

என் பயணமும்

வாழ்க்கை முழுதும்

என்னாயுள் வரை


நெற்றி முத்தம்

உன் முதல் ஸ்பரிசம்

ஊடுருவுகிறது

மனமெங்கும்

நித்தம் விரல்

தொட்டிட பொட்டிட


நீ தூரத்தே என்ற

துக்கம் இல்லை

பக்கத்தில் இல்லை என்ற

ஏக்கம் மட்டுமே


மண்ணில்

மறைந்திருக்கும் வேராய்

என்னுள்

உறைந்திருக்கும் நீ


நிலவுக்கே

போய் பார்த்து

சொன்ன பிறகுதான்

புரிந்தது தூரமாய்

இருந்து பார்த்தால்தான்

எல்லாம் அழகு என்று


சந்தோச தென்றல்

சன்னல் வழியே

சாமரம் வீசினாலும்

புலம் பெயர்தலின் வலி

பூக்கள் மட்டுமே அறியும்



உன்னுள் நான்

முழுநிலவுக்குள்

மூழ்கியிருக்கும்

மூன்றாம்பிறையாய்

இதையும் படிங்க:🌺💚👇

இரும்பாக

இருந்த என்னையே

உருக வைத்து விட்டாயே

உன் உண்மை அன்பினால்


தொடுதிரையில்

உன் குறுஞ்செய்தி

இயல்பாகவே அரும்புகிறது

இதழில் குறுநகை


பகலில் வாழும்

நட்சத்திரங்களாய்

பரிணமிக்காமலேயே

போய்விடுகிறது

பக்குவப்பட்ட காதல்கள்


போகிற போக்கில்

அள்ளித்தெளித்தபடியே

செல்கிறது உனது சந்தம்

எனது சந்தோச தருணங்களை


அலைபாய்கிறது மனம்

உன் நினைவுகளை மட்டும் தேடி

முகவரி தொலைத்த கடிதமாய்


வசந்தகால தென்றலில்

உனைத் தேடியே

அலைபாய்கிறது

மனம் நந்தவனத்து

வண்ணத்துப்பூச்சியாய்


உண்மை காதல்

என்ன செய்யும்

உணர்வுகளில் கரைந்தே

ஊமையாகி உறைந்து நிற்கும்


மண்ணைப்

திறந்துகொண்டுவரும்

துளிரைப்போலவே

உனது மனதை

திறந்து வைத்த

வரிகளும் அழகு


வந்தவுடன் மறைந்துவிடும்

வானவில்லாய் அல்ல

நமதன்பு வளர்பிறைக்குள்

ஒளிந்திருக்கும் பௌர்ணமிநிலவு


திரும்பாத நாட்களின்

திரும்பிய பக்கமெல்லாம்

திரும்பத் திரும்ப

தீண்டிவிட்டுச் சென்றது

உனதன்பை மட்டுமே


சிக்கிமுக்கி

கற்களாய் விழிகள்

மோதிக் கொண்டதில்

சிதைந்து

போனதென்னவோ மொழிகள்


உன் பிரிவின் வெப்பத்தில்

ஆவியாகி விட்டது

கண்ணீர் குளம்

ஆகாயத்தை அண்ணாந்து

பார்த்து காத்திருக்கிறது

மீண்டும் உன் பிரிய

மழையில் நனைய


உன் பிரிவின் வெப்பத்தில்

ஆவியாகி விட்டது

கண்ணீர் குளம்

ஆகாயத்தை அண்ணாந்து

பார்த்து காத்திருக்கிறது

மீண்டும் உன் பிரிய

மழையில் நனைய


மழை முத்தமிட்டு எழுப்பும்

மண்வாசனையை போல

என் சுவாசக்காற்றை முத்தமிட்டு

என்னை எழுப்பிச் செல்கிறது

உன் யோசனை


உள்ளத்து உணர்வெல்லாம்

உனைக் கண்டதும்

ஊமையாகி

வெளிப்படுத்த முடியாமல்

வெட்க்கச்சாயம்

பூசிக் கொள்கிறது

என் முகம்


உன் விழி மொழி

எனக்கு புரியும்

என்ற போதும்

ஒரு முறையாவது

வாய் மொழியின்


உருகுவோம்

ஒன்றாகவே

அன்பெனும்

அக்னியில்


சில அஸ்த்தமனங்கள்

ஏனோ

விரும்புவதேயில்ல

விடியலை


முற்றுப்பெறாத மாலைதான்

என் முதல் காதலால்

மட்டுமல்ல

உன் முழுமையான

காதலாலும்


உன் அழைப்பென்றாலே

ஆனந்தம்

தான் மனதுக்கு


தீண்டலில்

காற்றையும்

மிஞ்சி விடுகிறாய்

நீ இதமான

நினைவாகி தென்றலாய் 


சற்று கண் அசந்தாலும்

ஆழ்ந்து விடுகிறாய்

கண்ணுக்குள்ளும்

கனவாகவும் நீயே


என்னுலகம் பெரிதென்றாலும்

என்னுள்ளம்

வட்டமிட நினைப்பது

உன் மன வானில்

மட்டுமே


காணாமல் போன

என் புன்னகையும்

நொடியில் மலர்கிறது

உனை காணும்

போதுதான் மகிழ்வோடு



சிறு பொழுது

அருகிலிருந்தாலும்

முழு பொழுதையும்

உனதாக்கி விடுகிறாய்

அன்பில்

நிறைத்து மனதை


எப்படி யோசித்தாலும்

உனைத்தாண்டி

எதுவும் தோணுவதில்லை

என்பதே நிஜம்

என் சிந்தனையில்


பாதத்துக்கு பாலமாய்

வேண்டாம்

இதயத்துக்கு இதமாயிரு

போதும் அன்பே


ஆழ்நிலை தியானத்திலும்

ஜெபிக்கின்றது

உன் பெயரையே மனம்

காதல் வேதமாய்


உண்மை காதல்

உள்ளே நுழைந்தவுடன்

திரும்பவே

முடியாத சக்கரவியூகம்


கதிரவன்

கண் விழித்த

பின்னும்

உன் அணைப்பில்

கண் மூடி

கிடப்பதும் 

சுகம் தான்


வெயில் வெப்பத்தின்

தாக்கத்தை விட

உன் உடலுடன்

இணையும் பொழுது

உருவாகும் தாக்கத்தில்

இன்பமான வெப்ப மயக்கத்தை

உருவாக்கின்றது


எதிர்பாரா மழை

உன்னிடம் நெருக்கத்தை

உருவாக்கியது

அணைத்து கொள்ளும்

பொழுது

உன் நெஞ்சோரம்

மெல்லிய

மலைப்பாதையில்

என் தலையணைத்து கொண்டேன்


எனதென்று

எதுவுமில்லை

நாமென்றான

பின் அன்பே


காதல் கவிதைகள் 2022 - Tamil Love WhatsApp Status ❤

இதையும் படிங்க:🌺💚👇


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: