ஒரு மனைவி தன் கணவரிடம் காண்பிக்காத ஒன்று என்ன?
.... கணவனும், மனைவியும் ஒரு ஆற்றைக் கடக்கையில் எதிர்பாராத விதமாக கணவன் ஆற்றில் விழுந்து விட்டார்..... மனைவியே அய்யய்யயே என் கணவர் ஆற்றில் விழுந்து விட்டார் யாராவது வந்து காப்பாற்றுங்க, அய்யா காப்பாற்றுங்க என்று கதறினார், எவரும் கண்டுகொள்ள வில்லை.....
யாராவது என் கணவரை காப்பாற்றினால் அவருக்குக் கூட காண்பிக்காத ஒன்றை உங்களுக்கு காண்பிக்கிறேன். என்று சொல்லவும். அடித்து பிடித்து சில ஆண்கள் ஆற்றில் குறித்து கணவரை காப்பாற்றிவிட்டு...அந்த பெண்ணிடம் வந்து காட்டு, உன் கணவர் கூட பார்க்காத ஒன்றை காட்டு என்று கேட்கவும். அந்த பெண் கர்சீப்பை எடுத்து கணவரின் கண்களை கட்டி விட்டு......மரத்திற்கு பின்னாடி போய் வெள்ளை ஆடையை உடுத்திக் கொண்டு......கணவரை காப்பாற்றிய ஆண்கள் முன்னாடி வந்து நின்று....நீங்கள் என் கணவரை காப்பாற்றாமல் இருந்திருந்தால் ......என் இந்த கோலத்தை அவர் பார்த்திருக்க மாட்டார்.....என் கணவரிடம் காட்டாத ஒன்று இந்த "விதவைக் கோலம்" தான் என்று கண்ணீர் விடவும்....அந்த ஆண்கள் கையெடுத்து கும்பிட்டு கண் கலங்கி சென்றனர்.
Dr, பாக்யராஜ் எழுதிய கதை இது
Join Telegram 👇
0 comments: