Monday, May 30, 2022

Whatsapp Picture Status :: in Tamil வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் படங்கள் 2022

 


 சிந்தனை கவிதைகள்

 வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் லேட்டஸ்ட் 2" லைன் மற்றும் படங்கள் உள்ள கவிதைகள்  இங்கே..


சிலரின் விருப்பங்கள்

வெளிப்படையானவை

எளிதாக அனைவருக்கும்

தெரிந்துவிடும்

சிலரின் விருப்பங்கள்

மறைமுகமானவை

அவ்வளவு எளிதில்

யாருக்கும் தெரியாது...!




கவலைகள்

வந்து கொண்டு தான் இருக்கும்

அதனை நிரந்தரமாக்குவதும்

தற்காலிகமாக்குவதும்

நம்மிடம் தான் உள்ளது

நிரந்தரமாக்கினால்

நீ நோயாளி

தற்காலிகமாக்கினால்

நீ புத்திசாலி





நெருங்கவும் முடியாமல்

விலகவும் முடியாமல்

சில உறவுகள்

சொல்லவும் முடியாமல்

சில ஆசைகள்

மறக்கவும் முடியாமல்

வெறுக்கவும் முடியாமல்

சில நினைவுகள்...!




சில விஷயம்

புரிந்தால் தான் பிடிக்கும்

சில விஷயம்

பிடித்தால் தான் புரியும்




அதிகமாக சிரிக்கும்

ஒவ்வொரு மனிதனும்

தன் மனதில்

மிகப்பெரிய

காயத்தை வைத்திருப்பான்

எனவே மனதில்

எவ்வளவு காயமிருந்தாலும்

எல்லோரிடமும்

சிரித்து பழகுங்கள்

காயங்கள் காணாமற் போகட்டும்




உன் சந்தோசம்

உன்னை வாழ்க்கையின்

மீதான அன்பை

பெற வைக்கும்

உன் கவலை

வாழ்க்கையின் மீதான

நம்பிக்கையை

இழக்க வைக்கும்




ஒருவன்

தன் நிலையிலிருந்து

உயர்ந்தால்

அவன் தன் உறவுகளை

மறந்து விடுகிறான்

அதே ஒருவன்

தன் நிலையில்

இருந்து வீழ்ந்தால்

அவனை அவனது

உறவுகள் மறந்து

விடுகின்றனர்




வரம்பு மீறிய

வலியை கொடுப்பவர்கள்

முன்னே ஒருபோதும்

கதறி அழுதுவிடாதே

கலகலவென சிரித்துக்கொண்டே

அங்கிருந்து நகர்ந்துவிடு

குழம்பிப்போகட்டும்





உன்னை வலுப்படுத்த

தெரிந்தவர்களிடம் மட்டும

உங்கள் குறைகளை சொல்லுங்கள்

உன்னை பின்பற்றி

வருபவர்களிடம் மட்டும்

வழியை சொல்லுங்கள்

நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும்

அன்பை சொல்லுங்கள்

ஓடத்தெரிந்தவர்களிடம் மட்டும்

தூரத்தை சொல்லுங்கள்




சிறிய செயல்களில் கூட

உண்மையாய் இருங்கள்

ஏனெனில் அதில் தான்

நம்பலமே அடங்கியிருக்கிறது




எனது தேவை

என்பது அவசியம்

எனக்கு மட்டுமே

தேவையென்பது சுயநலம்

இன்னும் தேவையென்பது

பேராசை

எதுவும் தேவையில்லை

என்பதே மனிதாபிமானம்




எவ்வளவு தான்

பெரியவெற்றி அடைந்தாலும்

சிறு வயதில் கிடைத்த

சந்தோசத்திற்கு ஈடுகட்டியதில்லை




நாணயத்தின்

இரு பக்கங்கள்

போன்றது வாழ்க்கை

மென்மையாகப்

பேசும்போது இனிமையாகவும்

வன்மையாகப்

பேசும் போது

கசப்பாகவும் இருக்கும்

புரிந்து கொண்டால்

வாழ்க்கை உன்கையில்

வளமே உன் வாழ்க்கையில்




வாழ்க்கையில்

ஒன்றை விட

இன்னொன்று சிறந்தது

என்று எண்ணுவதை விட

ஒவ்வொன்றுக்கும்

ஒரு தனித்துவம் இருக்கும்

என்று புரிந்து கொண்டு

இயல்பாக ஏற்றுக்கொண்டால்

வாழ்க்கை சிறக்கும்




வார்த்தைகளை சிதறவிடாதே

பிறகு

நீ வள்ளுவராகவே

ஆனாலும்

யாரும் உன்னை

கவனிக்க மாட்டார்கள்




தோல்வி ஏற்ப்படின்

தோற்று விட்டோமே

என்று எண்ணாதே

நீ ஒரு நாள்

வென்று விடுவாய்

ஆனால் நேரத்தை

வீணாக்காதே

அது உன் தோல்வியை

பல மடங்கு

அதிகரித்து விடும்




வறுமை இல்லாமல்

வாழ வேண்டும்

என்று கடவுளை

வேண்டுவதை விட

வறுமையைக் கொடுத்தாலும்

அதனை தாங்கும் சக்தியையும்

சமாளிக்கக் கூடிய திறமையையும்

கொடு என்று

வேண்டுவதே சிறந்தது




எப்பவும்

எந்த சூழ்நிலையிலும்

என்ன நடந்தாலும்

நாம நாமளாவே

மாறாம

உறுதியா இருக்கனும்




யாரையும்

சார்ந்து வாழாதே

உன் சுயத்தை

தொலைத்திடுவாய்

சுயமாய் வாழப்பழகு

உன்னையே நீ நேசிப்பாய்




ரொம்ப சிந்திச்சா

மனசு வலிக்கும்

அப்புறம்

தலை வலிக்கும்

வாழ்க்கையையும்

மனுஷங்களையும்

அவங்க அவங்க

போக்கிலேயே விட்டுறணும்

அதான் நமக்கு நல்லது




சிரிக்க

கற்றுக் கொள்ளுங்கள்

நமது கவலைகளை

அடுத்தவரிடம் மறைப்பதற்கு





எழுதிய "மை"யில்

உண்"மை"யும்

வரைந்த "மை"யில்

உயிர்"மை"யும்

கறந்த பாலின்

தூய்"மை"யும்

இருக்க வேண்டும்




உங்களை மதிக்காதவர்களிடம்

நீங்கள் மதித்து பேசும்

சில வினாடிகள்

கூட வீணானதுதான்




நான் நானாக

இதுவரை யாருக்காகவும்

என்னை மாற்றிக்கொள்ளவில்லை

எனக்காக யாரையும்

மாற சொன்னதுமில்லை




புதியதை நினைப்போம்

சந்தோஷங்களை பகிர்வோம்

எதிரியை மன்னிப்போம்

அனைவரையும் நேசிப்போம்

எப்போதும் நம் வாழ்க்கை

மகிழ்ச்சியாக இருக்கும்




சில நேரங்களில்

புன்னகைக்கு அர்த்தம்

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

என்று அர்த்தம் இல்லை

ஏமாற்றங்களை

தாங்கிக் கொண்டும்

வலிமையாக இருக்கிறேன்

என்று பொருள்




குழந்தைகளின் புன்சிரிப்புக்கு

மதி மயங்காது

யாருமே இருக்க

வாய்ப்பு இல்லை

(அழகு)




என்னைப் பிடிச்சிருக்கானு

நாம் கேட்பதை விட

உங்களைப் பிடிச்சிருக்குன்னு

மத்தவங்க சொல்லணும்

அதுவே நம் வெற்றி




உன்னை

தெரிந்து கொள்

ஊரை

புரிந்து கொள்

யார் தேவை

என தெரிந்து

கொள்ளலாம்




துரோகியை

உற்றுப்பார்த்தால் உன்பழைய

உயிர்நண்பன்

கண்ணில் தெரிவான்

எதிரியை

உற்றுப்பார்த்தால் உன்எதிர்கால

வழிகாட்டி

கண்ணில் தெரிவான்




தொலைவுகளால்

தொலைந்தவர்களை

இணைத்து விட்டு

அருகில் இருப்போரை

தொலைதூரமாக்குவது தான்

இணையத்தின் இயல்போ




நம் கடந்த காலத்தை

திரும்பி பார்க்கும் போது

இவ்வளவு கிறுக்குதனமாவா

இருந்தோம்னு தோணுது








SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: